மொட்டுக்கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு சஜித் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு
மொட்டுக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பல்வேறு கட்சிகள்
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியானது, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை இணைத்துக் கொண்டு கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற வியூகமொன்றை வகுத்து வருகின்றது.

மேலும், கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் ) கட்யின் முக்கியஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு