குடியரசு தினத்தை மறந்துபோன அரசாங்கம்! ஞாபகப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
இலங்கையின் 54ஆவது குடியரசு தினம் இன்றாகும் என்பதுடன், இன்றைய குடியரசு தினத்தை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 22 அன்று வருகிறது. பிரித்தானிய முடியாட்சியின் கீழ் இருந்த டொமினியன் அந்தஸ்திலிருந்து விடுபட்டு, இலங்கையை ஒரு முழுமையான சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட குடியரசாக அறிவித்து, முதல் குடியரசு அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நாள் மரியாதையுடன் நினைவுகூரப்பட வேண்டும். 1815 ஆம் ஆண்டில், கண்டி உடன்படிக்கையின் மூலம் இலங்கை பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. அன்று முதல், நாட்டின் இறையாண்மை பிரித்தானியப் பேரரசுக்கு மாற்றப்பட்டது.
குடியரசு தினம்..
அதன்படி, அக்காலம் முதல், பிரித்தானிய அரியணையில் இருந்தவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் - நாயத்தினால் (கவர்னர் ஜெனரல்) நாடு ஆளப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி பெறப்பட்ட சுதந்திரம் டொமினியன் அந்தஸ்துடனான சுதந்திரமாகும்.

மேலும், இலங்கையின் உ;மையான அதிகாரம் கொண்ட தலைவர் பிரித்தானிய முடியாட்சியால் நியமிக்கப்பட்ட அரச தலைவராக (கவர்னர்) இருந்தார்.
இந்த நாட்டில் சில விடயங்கள் தொடர்பான இறுதி அதிகாரம் இங்கிலாந்திலேயே இருந்தது. நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட எந்தவொரு மசோதா கூட, பிரித்தானிய முடியரசின் சார்பாக ஆளுநர் கையொப்பமிடும் வரை சட்டமாக்கப்படவில்லை.
பொதுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, ஆளுநரே ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், இலங்கையின் உச்ச நீதிமன்றம் கூட இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கீழேயே செயற்பட்டது.. 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இலங்கை ஒரு முழுமையான சுதந்திர மற்றும் தன்னாட்சி பெற்ற அரசாங்கமாக ஆனது.
அக்காலத்தில், பிரதமர் சிறிமாவோ பண்டநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியரசு அரசியலமைப்பின் மூலம் இலங்கை முழு சுதந்திரம் பெற்றது.
'இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில் நாங்கள் எங்கள் நாட்டைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்; மேலும் நாட்டின் ஒருமைப்பாடு, பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெதாடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam