அரசியல் விவாதத்துக்கு அனுர குறிப்பிடும் நாட்களில் சஜித் பங்கேற்க மறுப்பு
அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு(Sajith Premadasa) வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அரசியல் தொடர்பான பகிரங்க விவாதமொன்றுக்கு எதிர்வரும் மே மாதம் 07,09,13 மற்றும் 14 ஆகிய நாட்களில் ஒரு திகதியை தேர்ந்தெடுத்து அறிவிக்குமாறு தேசிய மக்கள் சக்தி கடிதம் மூலமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு(Ranjith Madduma Bandara) அறிவித்திருந்தது.
நேரடி விவாதம்
எனினும் குறித்த தினங்களை முன்னதாகவே வேறு அலுவல்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் ஒதுக்கிக் கொண்டுள்ளதால் அதற்குப் பதிலாக எதிர்வரும் 25ஆம் திகதி அல்லது 26 ஆம் திகதிகளில் குறித்த விவாதத்தை வைத்துக் கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நளின் பண்டார எம்.பி(Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி, கட்சிகளின் பொருளாதார ஆலோசனைக் குழுக்களும் நேரடி விவாதம் ஒன்றில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
