அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவி! சஜித் தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கை
கோப், கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவியை தமது அணிக்கு வழங்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரியுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்தில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முக்கிய குழுக்களின் தலைமைப் பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பதவி
சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகப் பண்புகளை இந்த அரசு மதிக்கின்றதெனில், நாடாளுமன்றக் குழுக்களின் தலைமைப் பதவி எதிரணிகளுக்கு வழங்கப்படுவதே சிறப்பாக அமையும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு எதிரணிகள் கூட்டாக மனுவொன்றைக் கையளிக்கத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
