எதிர்க்கட்சித் தலைவரின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! அனுரகுமார
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் இவ்வாறான ஓர் சூழ்நிலையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென சஜித் கோரியுள்ளதாகவும், அவரது மூளையை பரிசோதனையிட வேண்டுமெனவும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் யாரும் தேர்தலை விரும்ப மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நலன்களைப் பெற்றுக்கொள்ள சஜித் முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான இழிவான முயற்சிகளுக்கு ஜே.வி.பி எந்த வகையிலும் ஆதரவளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.