கோவிட் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பும் சஜித் மற்றும் மனைவி
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ இன்று வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பவுள்ளனர்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளனர்.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் சஜித்திற்கு கோவிட் தொற்று உறுதியாகியது. அதற்கு முதல் நாள் அவரது மனைவிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இருவரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் ஒரே அறையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இருவரும் குணமடைந்துள்ள நிலையில் இன்று வீடு திரும்பவுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 18 மணி நேரம் முன்
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan