தென்னிலங்கையை உலுக்கிய மாணவனின் மரணம்! வெளிவராத உண்மைகள்
சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University) மாணவன் சரித் தில்ஷானின் திடீர் மரணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அத்தோடு, மாணவனின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தநிலையில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க இந்த துயர சம்பவத்திற்கு பகிடிவதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தவருடம் அதே பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, இந்த மாணவன் உயிரிழப்பதற்கு முன்னர் சில கடிதங்களை எழுதி வைத்துள்ளார்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சி.....
