இந்திய கடன் உதவியால்தான் மீண்டது இலங்கை : ரணிலுக்கு மனோ பதிலடி

Mano Ganeshan Ranil Wickremesinghe India Election Sri Lanka Presidential Election 2024
By Rakesh Aug 20, 2024 10:15 PM GMT
Report

400 கோடி அமெரிக்கா டொலர் தொடர் கடன் நிதி உதவியை இந்திய அரசு தந்ததால்தான் பெட்ரோல், உணவு, எரிவாயு, மருந்து வரிசைகள், மின்வெட்டுகள், உர தட்டுபாடு ஆகியவற்றில் இருந்து எமது நாடு காப்பாற்றப்பட்டது.

இந்த உண்மையை மறைத்து ரணில் விக்ரமசிங்க நரித்தனமாகப் பேசிச் திரிகின்றார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மாவனல்ல, ருவன்வெல்ல ஆகிய இடங்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ரணிலின் சின்னம் தொடர்பிலான முறைப்பாடு: மறுக்கும் ஆணைக்குழு அதிகாரி

ரணிலின் சின்னம் தொடர்பிலான முறைப்பாடு: மறுக்கும் ஆணைக்குழு அதிகாரி

கடன் நிதி உதவி 

அவர் மேலும் உரையாற்றுகையில், "இலங்கைக்கு இந்திய அரசின் தொடர் கடன் நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய அரசு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொள்கை ரீதியாக முடிவு எடுத்தது.

இவை ரணில் ஆட்சிக்கு வர முன்னர் தீர்மானிக்கப்பட்டவை. அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராகவும், ஜூலை மாதம் ஜனாதிபதியாகவும் ரணில் பதவிகளை ஏற்றார். ரணில் பதவிக்கு வந்து இவற்றைப் பயன்படுத்தினார்.

ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றைக் கொண்டு வரவில்லை. இந்த உதவிகள் இந்திய அரசு, இலங்கை மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும். இதனாலேயே, இந்நாட்டில் அத்தியாவாசியப் பொருள் வரிசைகள் நின்றன.

இந்திய கடன் உதவியால்தான் மீண்டது இலங்கை : ரணிலுக்கு மனோ பதிலடி | S Lanka Only Recovered With Indian Loan Assistance

மின் வெட்டு நின்றது. விவசாயத்துக்குத் தேவையான உரம் கூட ஓமன் நாட்டில் இருந்து இந்தியக் கடன் உதவி நிதி மூலம் பெற இந்திய அரசு அனுமதி தந்தது. இதுதான் உண்மை.

இதை மறுக்க முடியுமா என சரடு விடுபவர்களுக்கும், உண்மை தெரியாமல் பேசி திரிபவர்களுக்கும் நான் சவால் விடுகிறேன் என, இந்திய தேசம்தான், எமது நாட்டைக் காப்பாற்றியது என்ற அடிப்படை உண்மையை மறைத்து தான் ஏதோ நாட்டை காப்பாற்றியது போல் போகும் இடமெல்லாம் ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார்.

இந்தப் பொய்யை அவரது புதிய, பழைய எடுபிடிகளும் கூறி வருகின்றார்கள். நாட்டில் ஒரு தரப்பினர் உண்மை தெரியாமல் இதை நம்புகின்றார்கள். 400 கோடி அமெரிக்கா டொலர் தொடர் கடன் நிதி உதவியை இந்திய ஒன்றிய அரசு எமது நாட்டுக்கு வழங்கியது.

இந்திய கடன் உதவியால்தான் மீண்டது இலங்கை : ரணிலுக்கு மனோ பதிலடி | S Lanka Only Recovered With Indian Loan Assistance

அதேபோல் 400 கோடி இலங்கை ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை இந்திய தமிழ்நாடு மாநில அரசு எமக்கு வழங்கியது. இவற்றால்தான் எமது வரிசைகள் நீங்கின. இவை ரணில் ஆட்சிக்கு வர முன் தீர்மானிக்கப்பட்டவை.

இந்த உதவிகள் இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும். ரணில் பதவிக்கு வந்து அவற்றைப் பயன்படுத்தினார். ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றைக் கொண்டு வரவில்லை. ஆனால், இவை தனது சாதனைகள் என ரணில் வழமை போல் நரித்தனமாகக் கூறி வருகின்றார் என கூறியுள்ளார்.

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் : சந்தோஷ் ஜா

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் : சந்தோஷ் ஜா

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி - நாடு கடத்த நடவடிக்கை

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி - நாடு கடத்த நடவடிக்கை

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US