போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது கோர தாக்குதலை நடத்திய ரஷ்யா
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறும் அதேவேளை, உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஒரே இரவில் 600இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது வீசியுள்ளது.
அவற்றில் 577 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், எஞ்சிய சுட்டு வீழ்த்தப்படாத ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனின் மேற்கு பகுதியை தாக்கியுள்ளன.
உண்மையான அக்கறை
இதன்போது, குறைந்தது ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறிருக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் போதிலும், ரஷ்யா அமைதியில் உண்மையான அக்கறையை காட்டவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், போர் தொடர்ந்தும் நீடிப்பதால் உக்ரைன் அதன் நட்பு நாடுகளிடமிருந்து வலுவான வான் பாதுகாப்பு ஆதரவைக் கோருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
