புடின் உடனான சந்திப்பு : பாதுகாப்பு உத்தரவாதம் கோரும் ஜெலென்ஸ்கி
ரஷ்யாவின் விளாடிமிர் புடினுடன் நேருக்கு நேர் சந்திப்பதற்கு ஒப்புக்கொள்வதற்கு முன், மேற்கத்திய பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து மேலும் தெளிவு பெற விரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏழு முதல் 10 நாட்களுக்குள் பாதுகாப்பு உத்தரவாதக் கட்டமைப்பு பற்றிய புரிதலைப் பெற நாங்கள் விரும்புகிறோம் என்று ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
புடினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி ட்ரம்ப் மற்றும் புடினுடனான மும்முனை சந்திப்புதான் என்று ஜெலென்ஸ்கி முன்பு கூறியிருந்தார்.
திங்களன்று, புடினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான உச்சிமாநாட்டிற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும், அதன் பிறகு தன்னை உள்ளடக்கிய முத்தரப்பு அமர்வு நடைபெறலாம் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
எனினும், அந்தத் திட்டங்களை ரஷ்யா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மேலும் சமீபத்திய நாட்களில், மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் தெளிவற்ற வார்த்தைகளைக் கொண்ட அறிக்கைகளை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
