பலத்த காயங்களுடன் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய ரஷ்யர்கள்
உக்ரைனில் (Ukraine) இருந்து, இடம்பெயர்ந்த குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் 33 பேர் மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையர் கூறுகையில், "தென்மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 33 பேர் உக்ரைனில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடுமையான காயங்கள்..
அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் மற்றும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் பலருக்கு கடுமையான காயங்கள் மற்றும் நோய் உள்ளது. ஓகஸ்ட் மாதம் ஊடுருவியதில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் வலுக்கட்டயமாக இடம்பெயர்ந்தனர்.
ஆனால், கடந்த வாரம் கீவ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்துடன் மாஸ்கோ, வெளியிடப்படாத எண்ணிக்கையிலான குர்ஸ்க் குடியிருப்பாளர்களை உக்ரைனில் இருந்து பெலாரஸ் வழியாக சொந்த மண்ணுக்கு அனுப்ப வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொண்டது" என்றார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையில், குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
