அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானம் : பதிலடிக்கு தயாரான சுவீடன்
ரஷ்ய(Russia) இராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று சுவீடன்(Sweden) வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சம்பவம் அந்நாட்டு வான் போக்குவரத்து அதிகாரிகளை திடீர் பதற்றம் மற்றும் பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தின் போது ரஷ்ய போர் விமானங்கள் சுவீடன் நாட்டின் கிழக்கில் உள்ள பால்டிக் தீவான கோட்லாந்தின் வான்பரப்பில் பறந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு போர் விமானங்கள்
இதனையடுத்து சுவீடன் ஆயுதப்படை சார்பில், ரஷ்ய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரஷ்ய விமானிகள் சுவீடனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்போது சுவீடன் சார்பில் இரண்டு போர் விமானங்கள் அனுப்பப்பட்டதையடுத்து ரஷ்ய விமானங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன.
ரஷ்ய விமானங்கள் சுவீடன் வான்வெளியில் நீண்ட நேரம் அத்துமீறியதாக சுவீடன் இராணுவம் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் “ரஷ்யாவின் செயல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவை பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதையை குறைக்கும் வகையில் உள்ளது,” என சுவீடன் விமான படை தளபதி ஜோனஸ் விக்மேன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
