போலந்தில் கிரெம்ளினை விமர்சித்து வந்த ரஷ்யக் கலைஞர் சுட்டுக்கொலை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தீவிரமாக விமர்சித்து வந்த ரஷ்யக் கலைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலந்து அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.6.2026) போலந்தின் கிழக்கு நகரான பியாலா போட்லாஸ்காவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பெலாரஸ் நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
படுகொலை
கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான், ரஷ்ய தினமான ஜூன் 12 அன்று, இவர் பெர்லினுக்குச் சென்று ஜோசப் ஸ்டாலின் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோரைச் சித்திரவாதை செய்வது போன்ற ஒரு நையாண்டி ஓவியத்தை ஏந்திப் போராட்டம் நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுக்கு இராணுவ மற்றும் இதர உதவிகளை வழங்கும் முக்கிய மையமாக விளங்குவதால், போலந்து நாடு ரஷ்ய உளவாளிகளின் இலக்காகவும், நாசவேலைகளுக்கான களமாகவும் மாறி வருவதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.
இந்த படுகொலை சம்பவம் குறித்து போலந்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமை, பொலிஸார் மற்றும் வழக்கறிஞர்களுடன் இணைந்து தீவிரமாக விசாரித்து வருகிறது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri