இராணுவத்தில் இணைவதற்கான வயது வரம்பை இரத்து செய்தது ரஷ்யா
இராணுவத்தில் இணைவதற்கான வயது வரம்பை ரஷ்யா இரத்து செய்துள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கான யோசனை இன்று ரஷ்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வயது வரம்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான யுத்தம் 3 மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் ரஷ்ய இராணுவம் கூறுகையில், இந்த புதிய நடைமுறை தேவைக்கு ஏற்ற, சிறப்பு தகுதி மற்றும் திறன் உள்ளவர்களை பணியமர்த்துவதை எளிதாக்கும்.
இந்த புதிய யோசனை படி, இளம் வீரர்கள் அதிகளவானோரை இராணுவத்தில் இணைத்து கொள்ளலாம்.
அதேசமயம், இராணுவத்தில் இணைவதற்கான உச்ச வயது வரம்பு 40ஆக இருந்த நிலையில், இராணுவ சேவையில் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் அனுபவம் வாய்ந்தவர்களை இணைப்பதற்கு இந்த வயது வரம்பு இரத்து உதவும்.
சமீபத்திய ஆண்டுகளில், ரஷ்ய இராணுவம் தன்னார்வலர்களை அதிகளவில் நம்பியுள்ளது. அங்கு 18 - 27 வயதுடைய அனைத்து ஆண்களும், ஒரு வருட கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
ஆனால், பலர் பல காரணங்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் உரிய காரணம் கூறினால் மட்டுமே இராணுவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
இதற்குமுன் இராணுவத்தில் சேர ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷியர்களின் வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த உச்ச வயது வரம்பை ரஷ்யா இரத்து செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.