அமெரிக்க ஊடகவியலாளரை விடுவித்த ரஷ்யா: நெகிழ்ச்சியில் அமெரிக்கா
ரஷ்யாவிற்கும் (Russia) மேற்கு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்தில் அமெரிக்காவின் (US) ஊடகவியலாளர் இவான் கெர்ஷ்கோவிச் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பெர்லினில் நாடு கடத்தப்பட்டவரைக் கொலை செய்ததன் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த கைதி பரிமாற்றத்தில் மொத்தம் 24 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கத்தேய நாடுகள்
பனிப்போர் காலத்திற்கு பிறகு ரஷ்யா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பதிலாக, அமெரிக்கா, நோர்வே, ஜெர்மனி, போலந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் உள்ள சிறைகளில் இருந்து உளவுத்துறை நடவடிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் உட்பட எட்டு ரஷ்யர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ள இந்த கைதி பரிமாற்ற நடவடிக்கையானது, சுமார் 18 மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர் உள்ளிட்ட அமெரிக்க குடிமக்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்க அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
