267 ட்ரோன்களை ஏவி மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள ரஸ்யா
ரஸ்யா(Russia) இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ரஸ்ய- உக்ரைன் போர் ஆரம்பித்து 3ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் ரஸ்யா 267 ட்ரோன்களை ஏவி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்
இந்த 3 வருடங்களில் இதுவரை உக்ரைன் மீது நடந்திராத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாக இது பார்க்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா என 13இற்கும் மேற்பட்ட நகரங்களில் இடம்பெற்றுள்ளன.
உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், ரஸ்யா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரைனின் ஐந்து நகரங்களில் ரஸ்யா சேதம் விளைவித்துள்ளது.
267 ட்ரான்கள்
இந்தத் தாக்குதலின் போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஸ்ய ட்ரோன்களை அழித்தது. உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.
On February 23, 2025, Russia unleashed 267 drones against Ukraine, marking its largest drone assault since the start of the full-scale invasion.
— MFA of Ukraine 🇺🇦 (@MFA_Ukraine) February 23, 2025
Ukrainian air defenses successfully downed 138 of these drones. 119 imitation drones were lost. Russia must be held accountable. pic.twitter.com/jTduUrKqdt
இதேவேளை, கடந்த சனிக்கிழமை இரவு உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் நடந்த மற்றொரு ரஸ்ய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
ரஸ்யாவின் தாக்குதலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஸ்யா 1,150 ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை
உக்ரைன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படாத நிலையில் இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அத்துடன் உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |