உக்ரைன் மீது சரமாரியாக திடீர் தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதோடு, 200 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியதாவது, உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
ஏவுகணை தாக்குதல்
இந்த தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறித்த தாக்குதலில் ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது என்றார்.

இதற்கிடையே, உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது 'காட்டுமிராண்டித்தனமான' செயல் என்று கூறியுள்ளது.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாகவே ரஷ்யா உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்தி உள்ளமை
குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam