ட்ரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள ரஸ்யா! எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு
ரஸ்யா மற்றும் அமெரிக்காவிற்குமிடையில் கருத்து மோதல்கள் இடம் பெற்றுவருகையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் ரஸ்யா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ரஸ்யாவிற்கு அருகே 2 அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ரஸ்யா அதிரடி
அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய ரஸ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ட்ரம்ப் முன்னெடுத்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஸ்யா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என ரஸ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா




