கிராமியப் போக்குவரத்து தொடர்பில் கூடுதல் கரிசனை! ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை
கிராமியப் பிரதேச போக்குவரத்து தொடர்பில் கூடுதல் கரிசனை காட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மீளாய்வுக் கூட்டம்
துறைமுகங்கள், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார தலைமையில் நடைபெற்றது.
அதன்போது ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
கிராமியப் பிரதேசங்களில் பேருந்து சேவை
கிராமியப் பிரதேசங்களில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவது லாபமான செயற்பாடல்ல. எனினும் அதன்மூலம் ஏற்படும் இழப்புகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டாவது அதனை செயற்படுத்த வேண்டும்.
அத்துடன் கிராமியப் பிரதேசங்களில் கூடுதலான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 11 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
