பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!
வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் புலிகள் பயிற்சி முகாம் இயங்கி வருவதாகவும் ,ஆறுமாடி கட்டடம் இருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.
ஒருவேளை, விடுதலைப்பிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் அவ்வாறான கட்டடங்கள் இருக்கின்றதோ தெரியாது என்று கூறப்பட்டது.
இந்த தகவலை வெளியிட்டவர் தென்னிலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சங்கீத் ஜயசேகர என்பவராவர்.
தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதிகள் அத்தியாவசியத் தேவையாக இருப்பது உடனடியாக வடக்கு, கிழக்கில் ஏதாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.
மேலும், பளைப்பகுதியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமாக மாற்றப்போகின்றார்களா, அல்லது, வெடிகுண்டுகள் தயாரிக்கப்போகின்றார்களா என அங்கிருக்கும் அதிகாரிகள் தமக்கு தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வதந்தியை பரப்பிய பின்னணியில் இருப்பது யார், அவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வீட்டோடு தொடர்புடையவரா என்பது தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.