பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் - கணேசன் அனிரன்
ஆட்சியாளர்களாக இருந்து, பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, படித்த எங்களையே இவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னால், இந்த நாட்டிலே படிக்காத பாமர மக்களை எவ்வாறு ஏமாற்றுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்றைய தினம் (12.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவர் இதனை தெரிவித்தார்.
நிரந்தர நியமனம்
அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவருக்கும் தெரியும் கடந்த ஆறு வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியப் பணியினை ஆற்றிக்கொண்டு வருகின்ற இந்த பட்டதாரிகள், அவர்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக கடந்த ஆறு வருடங்கள் தொடர்ச்சியான முறையில் பல போராட்டங்கள், பல ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்திக்கொண்டு வருகின்றார்கள்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
அதன் அடிப்படையில் தற்போது இருக்கின்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு, முதலாம் மாதம் 26ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தீர்வு கிடைக்கும் வரையும் உண்ணாவிரதம் என்கின்ற அடிப்படையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை நடாத்தி இருந்தோம்.
அதன் அடிப்படையில் ஐந்தாம் நாள் நிறைவுற்றதன் பிற்பாடு ஜனாதிபதியினுடைய செயலாளரால் எங்களுக்கு ஜனாதிபதியோடு எமது விடயம் தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கலந்துரையாடல்
அதன் அடிப்படையில் அந்த கலந்துரையாடலில் பட்டதாரி ஒன்றியம் சார்ந்தும், பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய முக்கிய நிர்வாக உத்தியோகத்தர்கள் சார்ந்தும் நாங்கள் அந்த கலந்துரையாடலில் - கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்கள் ஜனாதிபதிக்கும் எங்களுக்கும் இடையிலே கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
அந்த கலந்துரையாடலின் போது எமது நாட்டினுடைய ஜனாதிபதி பல விடயங்களை, பல வாக்குறுதிகளைத் தந்திருந்ததோடு மாத்திரமல்லாமல், கடந்த ஆறு வருடங்களாக தீர்வு ஒன்று கிடைக்கப்பெறாத எமது பிரச்சினைக்கு தீர்வு ஒன்றினையும் வாக்குறுதி வாயிலாகத் தந்திருந்தார். ஆனால் எந்த ஒரு ஆவணங்களும் இதனூடாக எங்களுக்குத் தரப்படவில்லை.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
அந்த வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றமை உண்மையில் ஒரு படித்த சமூகம், அதே வேளை இந்த நாட்டிலே ஒரு முக்கியமான இடத்தில் பதிவு செய்யப்பட்ட சங்கம் என்கின்ற அடிப்படையில் கூட நாங்கள் இதனை உண்மையில் ஒரு கவலைக்குரிய விடயமாக நாங்கள் பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam