முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம்

Mullaitivu Sri Lanka Navy Journalists In Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Independent Writer Jul 05, 2024 08:11 AM GMT
Courtesy: Shanmugam Thavaseelan

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு மேதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, இன்று (04.07.2024) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளர் வருகை தந்து நீதிமன்றில் சாட்சியளித்ததுடன் தொடர்ந்து ஊடகவியலாளர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வீ. எஸ். எஸ் தனஞ்சயன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட மறைந்த சம்பந்தனின் பூதவுடல்

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட மறைந்த சம்பந்தனின் பூதவுடல்

தொடரப்பட்ட வழக்கு 

குறித்த ஊடகவியலாளர் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமின் புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு பொலிஸாரால் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம் | Rporter Shamnugam Thavaseelan Case On Inquiry

இதன்பின்னர், அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக வழக்கு இடம்பெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 

அன்றும் வழக்கு தொடுனரான குறித்த கடற்படை புலனாய்வாளர் வருகை தரவில்லை. இந்நிலையில் கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக பொலிஸார் நீதிபதிக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில், கடற்படை புலனாய்வாளர் மற்றும் அவரது சாட்சி ஆகிய இருவருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வழக்குகள் இடப்பெற்றிருந்தன.

பத்திரதாரர்களுடன் உடன்பாடு: காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம்

பத்திரதாரர்களுடன் உடன்பாடு: காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம்

கடற்படை புலனாய்வாளர் 

இருப்பினும், சில காரணங்களால் வழக்கு விசாரணைக்காக தவணை இடப்பட்டு இருந்த நிலையில் (07.04.2024) இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம் | Rporter Shamnugam Thavaseelan Case On Inquiry

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இதன்போது, செல்வபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தியதோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

திருகோணமலை சாஹிரா கல்லூரி உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் கையளிக்கப்பட்டன

திருகோணமலை சாஹிரா கல்லூரி உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் கையளிக்கப்பட்டன

பொலிஸ் விசாரணை 

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அடையாளப்படுத்த முற்பட்டவேளை, ஊடகவியலாளார் சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என வினவியுள்ளார். 

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம் | Rporter Shamnugam Thavaseelan Case On Inquiry

இருப்பினும், அவர் அதனை மறுத்து அந்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்ததில் தான் கடற்படை அதிகாரி என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, முல்லைத்தீவு பொலிஸாருக்கு சம்பவ இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், கடற்படை அதிகாரியை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என வினவியபோது, அவர் தங்களுடைய நபர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர் அந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை - ஜோ பைடன் திட்டவட்டம்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை - ஜோ பைடன் திட்டவட்டம்

நீதிமன்றில் முன்னிலை 

இதனை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் மறுநாள் மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அரச கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி முறைப்பாடு செய்துள்ளார். 

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம் | Rporter Shamnugam Thavaseelan Case On Inquiry

இதற்கமைய, சம்பவம் தொடர்பில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி சண்முகம் தவசீலனை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவசரமாக தரையிரக்கப்பட்ட கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

அவசரமாக தரையிரக்கப்பட்ட கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US