மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு

Tamils Sri Lanka Sri Lanka Final War Liberation Tigers of Tamil Eelam
By Renuka May 25, 2023 06:49 AM GMT
Report

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான 9ஆவது அரசவை அமர்வு மே மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் அமெரிக்கா நியுயோக் நகரில் நடைபெற்றுள்ளது.

தமிழீழ மக்களின் விடிவிற்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய புனிதர்களை நினைவு கூறுகின்ற நாளினை அடுத்து வருகின்ற வார இறுதி நாட்களிலும் அனைத்து நாடுகளிலும் உள்ள அரசவை உறுப்பினர்கள் ஒன்றாக அரசவையைக் கூட்டி உறுதியேற்புடன் தாயகம் நோக்கிய பணிகளை முன்னெடுப்பது வழமை.

அதற்கமைய வலிசுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை மனதிலிருத்தி கூடிய அரசவையின் தொடக்க நாள் நிகழ்வுகள் நியூயோர்க் சட்டத்தரணிகள் சங்க மண்டபத்தில் (New York City Bar Association) இடம்பெற்றிருந்தது.

மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு | Royal Session Of The Government Of Tamil Eelam

உலகத் தமிழர்களின் வகிபாகம் 

இதில் இந்து சமுத்திரத்தில் வளர்ந்துவரும் சீனாவின் ஆதிக்கம், இறைமையும், சுதந்திரமும் கொண்ட தமிழீழத்தை அமைப்பதற்கான உலகத் தமிழர்களின் வகிபாகம் ஆகியன கருப் பொருட்களாக எடுக்கப்பட்டன. கட்டுமான இனப்படுகொலையை (Structural Genocide) தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் பேசப்பட்டன.

முதல் நாள் அமர்வில், தோழமை உணர்வுடன் பங்குபற்றிய ஆர்மேனிய முன்னாள் ஐ. நா சபைப் பிரதிநிதியும், தற்போதைய ஆர்மேனிய அமெரிக்க அமைப்பின் தலைவரான வன் கிரிகோரியன் (Van Krikorian) ஆர்மேனிய மக்களின் மீதான இன அழிப்பிற்கும், முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பிற்கும் இடையே இருந்த ஒத்தைத் தகமைகளைச் சுட்டிக்காட்டிப் பேசியதுடன், ஈழ மக்கள் எதிர்கொள்ளும் சிங்களத்தின் கட்டமைப்புசார் இன அழிப்பிற்கும், அஜர் பஜானில் ஆர்மேனிய மக்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்பு சார் இன அழிப்பிற்கும் உள்ள ஒத்தைத் தகமைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி, பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம்தான் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணலாம் எனக் குறிப்பிட்டார்.

தாயகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இணையவழி மூலம் பங்குபற்றி உரையாற்றியதுடன், மாவை சேனாதிராஜா அவர்கள் எழுத்து மூலம் வாழ்த்துகளையும். தாயகத்தில் வேகமாக நடைபெற்றுவரும் கட்டுமான இனப்படுகொலைகள் பற்றியும் சுட்டிக்காட்டி இருந்தார்கள்.

மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு | Royal Session Of The Government Of Tamil Eelam

ஈழத்தமிழர் நிலை 

மேலும், தாயகத்தில் அரசியல் நடவடிக்கைகளும். புலத்தில் அரசியல் நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று பலம் உள்ளதாக அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இத்தாலியில் இருந்து “ஐரோப்பிய புதிய தலைமுறை ஒன்றியம்” ஐச் சேர்ந்த அருகன் அவர்கள் தங்களது அரசியல் கட்சிக்கு நாடுகடத்தத் தமிழீழ அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்து “நன்றிநவிலல்” பட்டயத்தைப் பிரதமருக்கு வழங்கினார்.

பிரான்ஸ்சில் இருந்து சட்டவாளர் தோமஸ் கஸ்டஜோன் (Thomas Castejon) அவர்கள் பிரான்ஸ்சில் ஈழத்தமிழர் நிலை குறித்தும், இனப் படுகொலை தொடர்பானபொறுப்புக்கூறல் குறித்தும் பேசினார்.

தமிழ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து அருண்குமார் அவர்கள் பரிணமித்துவரும் பல்மைய உலக ஒழுங்கில் தமிழர்களுடைய அரசியல் பெருவிருப்பிற்கு அங்கீகாரம் வழங்குவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு | Royal Session Of The Government Of Tamil Eelam

போராட வேண்டும்

தமிழக வணிக வலைபின்னல் தலைவர் சதாசிவம் காணொளிமூலம் உரையாற்றினார். மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் தலைவர் அனன் பொன்னம்பலம், தமிழ் அமெரிக்க ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு தலைவர் மீனா இழஞ்செழியன், சங்கம் அமைப்பு சுஜாந்தி, உலகத் தமிழர் அமைப்பு ரவிக்குமார் ஆகியோர் தோழமை உணர்வுடன் உரையாற்றினார்கள்.

மேலும், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சாண் சென் (Shaun Chen) கனடாவின் எதிர்க் கட்சித் தலைவர் Pierre Poilievere, மலேசியாவில் இருந்து பேராசிரியர் ராமசாமி ஆகியோர் காணொளி மூலம் வாழ்த்துத் தெரிவித்து இருந்தார்கள். 

இரண்டாம் நாள் அமர்வில் அவைத்தலைவர் பிரதமர் ஆகியோரின் உரையுடன் ஆரம்பித்து இருந்தது. பிரதமர்தனது உரையில், இலங்கைத் தீவில் 1,600 கிலோ மீற்றர் நீளமான கரையோரப் பகுதிகளில் 1,050 கிலோ மீற்றர்கரையோரப் பகுதிகள் ஈழத்தமிழர் தாயகப் பிரதேசத்திற்கு உரியதாக உள்ளது என்று கூறினார்.

மேலும், இலங்கைத் தீவில் மொத்தக் கரையோரப் பகுதிகளில் 66 வீதத்திற்கு உரித்துடையவர்களாக ஈழத் தமிழர்களிருந்தபோதிலும் இலங்கைத்தீவு குறித்தோ, இந்தியப் பெருங்கடல் குறித்தோ எடுக்கப்பட்ட புவிசார் அரசியல்களில் ஈழத் தமிழர்கள் பங்காளிகளாக இல்லாத நிலையை சுட்டிக்காட்டி இப் புவிசார் அரசியலில் எமக்குள்ள பங்கிற்காக நாம் போராட வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு | Royal Session Of The Government Of Tamil Eelam

 தமிழ்த் தேசியப் பிரச்சினை

மேலும் தமிழர் தாயகத்தை அடைய கடலில் ஈழத்தமிழர்களினது இறைமையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் இடர் கால தன்னாட்சி அதிகார சபை(ISGA) வரைபு குறிப்பிட்டிருந்தமையையும் சுட்டிக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மேலவையும் அரசவையும் இணைந்த உரையாடல் ஆரம்பித்தது. அதில் செனட்டர் ராஜரட்னம் அவர்கள் உலகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கான வழிவகைகள் தொடர்பாகவும், வைத்தியக் கலாநிதிஜெயலிங்கம் அவர்கள் தமிழ்த் தேசியப் பிரச்சினையும்.  இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியாவின் செல்வாக்கு (influence) குறைந்து வருவதும், தமிழர் பகுதிகளில் சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேசினார்.

செனட்டர் உஷா சிறீஸ்கந்தராசா தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள - பௌத்த மயமாக்கல் நடவடிக்கை ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் அழிக்கும் நோக்கத்துடன், இடம்பெற்று வருவதைச் சுட்டிக் காட்டினார். 

செனட்டர்வ்சத்யா சிவராமன் இன்றைய சர்வதேச அரசியலை ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் உள்ள போட்டியாக வெறுமனே கருதமுடியாது எனக் கூறினார்.

மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு | Royal Session Of The Government Of Tamil Eelam

பொது வாக்கெடுப்பு

மேலவை உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தொடர்ந்து நடைபெற்ற உரையாடல்களில் தமிழ்த்தேசியப் பிரச்சினையை BRICS ( Brazil, Russia. India, China and South Africa) அமைப்பிற்கும். சீனாவிற்குத் தெரியப்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் தமிழக சட்டசபையில் பொது வாக்கெடுப்பு தொடர்பாக மீண்டுமொரு தீர்மானம் கொண்டுவரப்படுவது பற்றிப் பேசப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் தங்களது 6 மாதகாலம் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பித்து அதுதொடர்பான விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர் நேரத்தில் நடைபெற்ற உரையாடல்கள் நாடுகடத்த தமிழீழ அரசாங்கம் பேணிவரும் ஜனநாயக விழுமியங்களை எடுத்துக் காட்டுவதாக அமைந்தன.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் அரசவை அமர்வு நிறைவு பெற்றுள்ளது.  

மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு | Royal Session Of The Government Of Tamil Eelam

மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு | Royal Session Of The Government Of Tamil Eelam

மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு | Royal Session Of The Government Of Tamil Eelam

மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு | Royal Session Of The Government Of Tamil Eelam

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW    




மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, Markham, Canada

03 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருச்சி, India

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
மரண அறிவித்தல்

இளவாலை, புத்தளம்

02 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, வவுனியா, Montreal, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US