கொவிட் தடுப்பூசி பிரச்சனையால் பாரிய நெருக்கடியில் ரோஸி சேனாநாயக்க
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பெருமளவு மக்களுக்கு முதல் தடுப்பூசியாக எஸ்ட்ராசெனிக்கா வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்ட ஒரு லட்சம் மக்களுக்கு அதன் இரண்டாவது தடுப்பூசியை வழங்க முடியாத நிலையில் உள்ளமையினால், தான் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்ட்ராசெனிக்கா முதலாவது தடுப்பூசியை பெற்ற மக்கள் அதன் இரண்டாவது தடுப்பூசியை எப்போது பெறுவதென தான் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வினவியதாக அவர் கூறியுள்ளார். எனினும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் நேற்று ஊடகத்திடம் கருத்து வெளியிடும் போது மேயர் ரோஸி சேனாநாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
