இனி போட்டியிடப் போவதில்லை! ரோஸி அறிவிப்பு
அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்துடனேயே இருக்கின்றேன். இம்முறை மாத்திரமே தேர்தலில் போட்டியிடுகின்றேன். இனி போட்டியிடப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயருமான ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லமாட்டேன்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
நான் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தும் நபர். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லமாட்டேன். தேசிய அரசியலில் இருந்து ஓய்வுபெறத் திட்டமிட்டேன்.
கோவிட், பொருளாதார
நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மேயராக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க
முடியாமல் போனது. எனவே, திட்டங்களை முன்னெடுக்கவும், நான் தலைமைத்துவம்
வழங்கிய அணிக்காகவுமே இம்முறை போட்டியிடுகின்றேன். இனிமேல் தேர்தலில்
களமிறங்கமாட்டேன் என்றார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
