எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க
தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (27.11.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இன்றோ, நாளையோ நடுவீதியில் நான் படுகொலை செய்யப்படலாம்.

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்
உயிர் அச்சுறுத்தல்
இந்த உயிர் அச்சுறுத்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாம் அமைச்சுப் பதவி வகிப்பதற்கு தகுதியானவர் எனவும், மக்களின் வாக்குகளினால் தெரிவானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் அரசியலில் எவ்வித ஊழல் மோசடிகளிலும் தாம் ஈடுபட்டதில்லை எனவும், சொந்த வியாபார முயற்சிகள் மூலம் கடின உழைப்பில் முன்னேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சாகல ரத்நாயக்க எவ்வித தகுதியும் இன்றி அமைச்சு விவகாரங்களில் தலையீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி தம்மை பழி வாங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவு
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தாமும் ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பழையவற்றை மறந்து தற்பொழுது தம்மை பழிவாங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்படுவதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிறுவனத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம் பெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கிரிக்கெட்டில் நிலவிவரும் மோசடிகளை தடுக்க முடியாவிட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலேனும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
