வெளிநாடொன்றில் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட சிலைகள்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டுச் சம்வபம் ஒன்று நடைபெற்றுள்ளது.
திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள்
சிரியாவின் தொல்பொருட்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கான இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர், 6 சிலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு அதிகாரி பல சிலைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் சரியான விபரத்தை அவர் குறிப்பிடவில்லை.

சிரியாவில் மார்ச் 2011இல் மோதல் தொடங்கிய பிறகு, அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை டமாஸ்கஸுக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam