அமெரிக்காவுக்கான தென்னாப்பிரிக்கத் தூதுவராக ரோல்ஃப் மேயர் நியமனம்
அமெரிக்காவுக்கான தென்னாப்பிரிக்காவின் அடுத்த தூதுவராக, நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றிய ரோல்ஃப் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2025 மார்ச் மாதம், தென்னாப்பிரிக்கத் தூதுவராக இருந்த இப்ராஹிம் ரசூல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'MAGA' கொள்கைகளை விமர்சித்ததற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் ஓராண்டுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இராஜதந்திர விரிசல்களைச் சரி செய்யும் நோக்குடனேயே, 78 வயதான மூத்த இராஜதந்திரி ரோல்ஃப் மேயரை தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா இந்தப் பதவிக்குத் தெரிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காணிச் சீர்திருத்தச் சட்டம்
கடந்த காலங்களில், தென்னாப்பிரிக்காவின் காணிச் சீர்திருத்தச் சட்டம் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் அந்நாடு தொடர்ந்த வழக்கு போன்றவற்றால் அதிருப்தியடைந்த ஜனாதிபதி ட்ரம்ப், தென்னாப்பிரிக்காவிற்கான வெளிநாட்டு உதவிகளை முடக்கியிருந்தார்.

அத்துடன், தென்னாப்பிரிக்காவில் வாழும் வெள்ளை இனத்தவர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி அவர்களுக்கெனப் பிரத்தியேக அகதித் திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.
மோசமான அரசியல்
இவ்வாறான மிக மோசமான அரசியல் சூழலில், 1990களில் நிறவெறி ஆட்சிக் காலத்தில் வெள்ளை ஆப்பிரிக்கச் சிறுபான்மை அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து, பின்னர் கறுப்பினத் தலைவர்களுடன் இணைந்து ஜனநாயக மாற்றத்திற்கு வித்திட்ட ரோல்ஃப் மேயரின் அனுபவம், வொஷிங்டனுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2006 இல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் (ANC) இணைந்த மேயர், விரைவில் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam