குருணாகல் வைத்தியசாலைக்கு உதவிகளை வழங்கிய ரோஹித்த ராஜபக்ச!
பிரதமரின் இளைய புதல்வர் குருணாகல் வைத்தியசாலைக்கு உதவிகளை வழங்கினார் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) மற்றும் பொல்பித்திகம கருணாரட்ன (Polpithigama Kumararatne) ஆகியோர் குருணாகல் வைத்தியசாலைக்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குருணாகல் வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றதாகவும், அதன் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாகவும் ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.