மக்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்
நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என தெரிந்தும் களுத்துறை பிரதேசத்திற்கு நன்றியை தெரிவிக்கவே வந்தேன் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardana) கண்ணீர் விட்டழுத சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
களுத்துறையில்(kalutara) நேற்று(10.11.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் கண்ணீர் விட்டழுதுள்ளார்.
அங்கு உரையாற்றிய அவர், அபேகுணவர்தன அமைச்சராக மாட்டார் என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்.
நன்றி தெரிவிப்பு
அதையறிந்து நான் இங்கு எனது நன்றியை தெரிவிக்கவே வந்தேன்.

எனினும் விரக்தியால் அரசியலை விட்டு விலக மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2022 ஆண்டும் ரோஹித அபேகுணவர்தன, மே 9 ஆம் திகதி தனது வீடு தாக்கப்பட்ட பல சம்பவங்களை நினைவு கூர்ந்து அரசியல் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கண்ணீர் விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam