ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விக வேண்டும் - ரோஹன லக்ஷ்மன் பியதாச
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையானால், அரசாங்கத்தில் இருந்தவாறு அரசாங்கத்துடன் பணியாற்ற முடியும்.
ஏனையோர் அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
அரசாங்கத்தின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதால், கிராமங்களில் உள்ள கட்சியினரை எதிர்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் ரோஹன பியதாச குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இது சம்பந்தமாக மற்றுமொரு நாளில் கலந்துரையாடி தீர்மானிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாட ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
