சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ரொஜர் பெடரர்
சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் டென்னிஸ் போட்டிகளுக்கு விடை கொடுத்துள்ளார்.
அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்த அவர், நேற்று லண்டனில் ஆரம்பித்த லேவர் கிண்ணத்தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. ஐரோப்பிய அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் மற்றும் ஒரு முன்னணி வீரரான ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ - ஜெக் சாக் இணையுடன் போட்டியிட்டனர்.
டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டி
இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ - ஜெக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவினர். இதையடுத்து டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரொஜர் பெடரர் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார்.
ஃபெடரர்இ நடால் மற்றும் பிற வீரர்களைக் கட்டியணைத்து அழுதார் பின்னர் தமது பெயரைக் கோஷமிட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாராட்டைப்பெற்றுள்ளார்.
'இது ஒரு அற்புதமான நாள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் சோகமாக இல்லை. இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அதை முடித்ததில் மகிழ்ச்சி' என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
41 வயதான அவர் ஒரு தொழில்முறை நிபுணராக ஓய்வு பெற்றுள்ளார்.
20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற சுவிஸ் வீரர் டென்னிஸ் வரலாற்றில்
சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகின்றார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
