மீண்டும் மூடப்பட்ட மஹியங்கனை பிரதான வீதியின் 18 வளைவுப் பாதை
கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் 18 வளைவுப் பாதை நேற்றிரவு பாதைசீர்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மீண்டும் மூடப்பட்டிருந்தது.
குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் ஏனைய தடங்கல்கள் காரணமாகவும் பாதை செப்பனிடுவதற்காகவும் மீண்டும் இந்த பாதை மூடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், நேற்றிரவு(20.03.2023) 8 மணி முதல் இன்று(21.03.2023) அதிகாலை 5 மணி வரை குறித்த பகுதி மூடப்பட்டிருந்ததாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வழமைக்கு திரும்பியுள்ள போக்குவரத்து
இன்று தொடக்கம் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தலவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.