வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் பத்து லட்சம் பணம் கொள்ளை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து பத்து லட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வருகை தந்த கட்டாரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரயிலில் பயணித்த போது பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் மற்றும் கட்டார் ரியால் உள்ளிட்ட நாயணத்தாள்கள் அடங்கிய சுமார் பத்து லட்சம் இலங்கை ரூபா மதிப்புடைய பணம் இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

கொள்ளை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு
வெளிநாட்டு நாணயத்தாள்கள், மடிக்கணனி, பவர் பேங்க் உள்ளிட்டன போட்டு வைக்கப்பட்டிருந்த பயணப்பை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டுப் பிரஜை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நபரிடமிருந்து பணம் கொள்ளையிட்ட நபரை அடையாளம் கண்டு, கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தியதலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan