மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து பெருமளவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று இரவு (07.06.2024) இடம்பெற்றுள்ளது.
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில் வீட்டிலிருந்தவர்கள் வீடினை பூட்டி சாவியை வீட்டின் அருகில் மறைத்துவைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை
பின்னர் வீட்டார் வந்து பார்த்தபோது வீட்டின் படுக்கையறையிலிருந்த நிலைப்பேழை (cupboard) உடைக்கப்பட்டு அதிலிருந்த 17 இலட்சத்து 50ஆயிரம் ரூபா பணமும் நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சீசீரிவி கமராவின் காட்சிகளை சேமிக்கும் பாகமும் (Hard disk) திருடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வீட்டின் மதில் பகுதியினால் வந்து மறைத்துவைத்திருந்த சாவியினை எடுத்து வீட்டிற்குள் சென்று இந்த செயலை செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan