திருகோணமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை- தோப்பூர் -அப்றார் நகர் கிராமத்திற்குள் காட்டு யானைகள் உட்புகுந்து உடைமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளன.
குறித்த சம்பவமானது இன்று (1) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது பயன் தரும் தென்னை மரங்கள் , வாழை மரங்கள், வீட்டு சுற்று வேலிகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மக்கள் கோரிக்கை
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பயிர் செய்தும் காட்டு யானைகள் சேதம் விளைவிப்பதாகவும்,கடந்த வாரமும் காட்டு யானைகள் வந்து பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றனர்.
பக்கத்து கிராமத்தில் இரண்டு தினங்களுக்கு முன்னர் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவத்தையும் நினைவுபடுத்தி தங்களுடைய கவலையை வெளிப்படுத்தினர்.
காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடு தராது.
இருப்பினும் மக்கள் குடியிருப்புக்குள் யானை உட்புகாத வகையில் யானை பாதுகாப்பு வேலிகளை அமைத்துத்தர வேண்டுமெனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
