யாழில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும் முக்கிய வீதி - பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தி ஆடிய பாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நாளை திங்கட்கிழமை முதல் (01.06.2026) ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் திருநெல்வேலி சந்தியிலிருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக உள்ள ஆடியபாத வீதியின் ஒரு பகுதி செவ்வாய் (02.06.2026) மற்றும் புதன்கிழமை (03.06.2026) இரு நாட்களும் ஒரு வழி பாதையாக மாற்றி அமைக்கப்படுகின்றது.
பணிகளுக்கு இடையூறு
இதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை நாட்களில் திருநெல்வேலி சந்தியில் இருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக வாகனங்கள் உட்செல்ல முடியாது என்பதினை மன வருத்தத்துடன் அறியத்தருகின்றேன் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதி புனரமைப்பு பணிகளால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெருக்கடியை கருத்தில்கொண்டு குறித்த வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு பகல் நேரங்களில் வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்குவதினை தவிர்த்து இரவு நேரங்களில் பொருட்களை இறக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் குறித்த பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
பெரும் சிக்கலில் டுபாயில் பதுங்கியிருக்கும் ஆபத்தான நபர்கள்.! இரகசிய நடவடிக்கையினால் நாட்டை விட்டு தப்பியோட முயற்சி
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam
சர்ச்சைக்கு மத்தியிலும் CM விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித் தயாருக்கு அஞ்சலி! படுவைரலாகும் வீடியோ Manithan