கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதியால் ஏற்பட்ட சிக்கல்
கொழும்பு, பொரளையில் திடீரென வீதி தாழிறங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொரளை, மொடல் பார்ம் சந்திப்புக்கு அருகில் இருந்து டி.எஸ். சேனநாயக்க சந்திப்பு வரை கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியின் ஒருபகுதி தாழிறங்கியுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொரளை மயானம்
மொடல் பார்ம் சந்திப்பு வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள், மொடல் பார்ம் சந்திப்பிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டாரத்தை நோக்கிச் சென்று பேஸ்லைன் வீதிக்குள் நுழையலாம்.
ராஜகிரியவிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள், கொட்டாவ வீதி வழியாக ஆயுர்வேத சுற்றுவட்டாரத்தை நோக்கி கொழும்புக்குள் நுழையலாம்.
கொழும்பிலிருந்து மொடல் பார்ம் சந்திப்பு வழியாக ஸ்ரீ ஜெயவர்தனபுர வீதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள், டி.எஸ். சேனநாயக்க சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கொட்டாவ வீதி வழியாக பொரளை சந்திப்பு ஊடாக ஸ்ரீ ஜெயவர்தனபுர சாலைக்குள் நுழையலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
