சுழிபுரம் மேற்கு வீதியை புணரமைத்து தருமாறு கோரிக்கை
சுழிபுரம் மேற்கு வீதியை புணரமைத்து தருமாறு சுழிபுரம் பிரதேச சபை தவிசாளர்க்கு தி.சிவசண்முகநாதன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் மத்தி ஆகிய பிரதேசங்களுக்கு சுழிபுரம் சந்தியில் இருந்து செல்லும் கல்லை வேம்படி வீதி, பெரிய தம்பிரான் வீதி ஆகிய வீதிகள் மாரி மழை காலத்தில் 1மாதம் வரை நீர் தேங்கி போக்குவரத்து இடையூறாக இருக்கிறது. ஆகவே அதனைச் சீர்செய்து தருமாறு கோரி தி.சிவசண்முகநாதனால் கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளது.
குறித்த கடிதத்துடன் இணைத்து, புணரமைக்க வேண்டிய பாதை வரைப்படங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |