லிந்துலையில் 7 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி - அதிகாரிகளின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டி மக்கள்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா பிரதான வீதியுடன் இணைக்கும் மிளகுசேனை வீதி கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்படுவதால், அந்த வீதியை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிளினிக்கல், என்போல், கிலோசோ, ஹோல்புறுக் உள்ளிட்ட பல தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.
விசனம் தெரிவிக்கும் மக்கள்
ஆனால், இந்த வீதி மிக மோசமான நிலையில் காணப்படுவதால் அவசர காலங்களில் ஒரு நோயாளியைக் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அசமந்த போக்கில் செயல்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வீதி உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதால், அவசரத்திற்கு ஆட்டோவில் சென்றாலும் 1500 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும், இது ஒரு தொழிலாளியின் ஒரு நாள் சம்பளத்துக்கு சமமானதாகும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.
அதிக கட்டணம் அறவீடும் சாரதிகள்
சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,
வீதி மோசமான நிலையில் இருப்பதால் அடிக்கடி வாகனங்களை பழுதுபார்க்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் கிடைக்கும் வருமானம் பெரும்பாலும் வாகன திருத்தச் செலவுகளுக்கே செலவாகிவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்கள் தற்போதைய நிலையில் அதிக கட்டணம் வசூலிக்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வறட்சி காலத்திலேயே இந்த நிலை இருந்தால், மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் கிளினிக்குகளுக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam