வீதி அபிவிருத்தி பணிகள்: வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos)
வீதி அபிவிருத்தி பணிகளுக்காக வவுனியா - மன்னார் பிரதான வீதியினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதியினை பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி பணிகள்
வவுனியா சிங்கள பிரதேச செயலகம் அமைந்துள்ள பகுதியினை அண்மித்த பகுதியில் வவுனியா மன்னார் பிரதான வீதியில் காணப்படும் புகையிரத கடவை பாதையினை சீர்செய்யும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் இன்று(01.10.2022) முற்பகல் 7.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் (02.10.2022) பிற்பகல் 10.30மணி வரையிலான காலப்பகுதிக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எனவே மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகதாக வகையில் மாற்று வீதிகளான புகையிரத நிலைய வீதி, நகரசபை நூலக வீதி, அரச விடுதி வீதி போன்ற வீதிகளை பயன்படுத்துமாறு இலங்கை புகையிரத திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
