தென்னிலங்கையில் கோர விபத்து: ஸ்தலத்தில் மூவர் பலி
காலியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி - பூஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து இன்று (23.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து கடவை
தொடருந்து கடவையின் பாதுகாப்பற்ற சமிஞ்சை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த கடவையில் உரிய முறையில் சமிஞ்சை செயற்படவில்லை என நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மூன்று பேர் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |