இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: ஒரே நாளில் 10 பேர் பலி
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினம் (30.05.2023) ஒரே நாளில் மட்டும் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா - நீர்கொழும்பில் பாதசாரிகள் இருவரை லொறி மோதியதில் இருவர் மரணமடைந்துள்ளார்.
மூன்று வயது ஆண் குழந்தையும், அவரின் 29 வயதான தந்தையுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கண்டி - கம்பளையில் போருந்து மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
பேருந்தை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்டவேளை அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
உயிரிழப்புக்கள்
குருநாகல் - குளியாப்பிட்டியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி மரணமடைந்துள்ளார். 42 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வான் மோதியதில் பாதசாரி ஒருவர் மரணமடைந்துள்ளார். 68 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - வெள்ளவத்தையில் தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மரணங்கள்
அநுராதபுரம் - ஸ்வஸ்திபுர பகுதியில் வான் விபத்துக்குள்ளானதில் 76 வயதான பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளனர். களுத்துறை - பாணந்துறையில் ஓட்டோ கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார்.
33 வயதான முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த 41 வயதான பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
மொனராகலை - வெல்லவாயவில் ஹயஸ் வான் மோதியதில் 72 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
