எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம்
நாளை முதல் (04) எரிபொருள் முற்பதிவுகள் இரத்துச் செய்யப்படும் என்று, பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன, இன்று (03) பிற்பகல் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கூட்டுத்தாபனத்தின் முயற்சி
செயற்பாட்டுக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்ட 45 சதவீத தள்ளுபடியை மீளப்பெறும் கூட்டுத்தாபனத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் நாளை முதல் விநியோக சேவையை தவிர்க்கவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.