அவுஸ்திரேலியாவில் கடும் வெள்ளப்பெருக்கு அபாயம் - சில பகுதிகளில் பேரிடர் நிலை அறிவிப்பு
அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாளை பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு கொட்டித் தீர்க்கும் மழை மற்றும் புயலுடன் கூடிய வானிலை காரணமாக நியூ சவுத் வேல் மாநிலத்தின் Coffs Harbour, Grafton, Cessnock, Dungog உள்ளிட்ட மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இயற்கைப்பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநிலத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் குளங்கள் உடைப்பெடுத்து பெருவெள்ளம் குடிமனைகளுக்குள்ளும் புகுந்துகொண்டதுடன், இனிவரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், நியூ சவுத் வேல்ஸ் மாநில அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அவசரகால அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் ,வேகமாக செல்லும் வெள்ளப்பெருக்கு அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் 4,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக, சிட்னியின் பிரதான நீர்வழங்கல் அணையான வார்ரகாம்பா உட்பட பல அணைகள் நிரம்பியதால், தண்ணீர் திறக்கப்பட்டு, ஆறுகளில் நீர்மட்டம் திடீரென அதிகரித்துள்ளதுடன், கொந்தளிப்பான வானிலை காரணமாக, நியூ சவுத் வேல்சில் கோவிட் தடுப்பூசி போடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,நியூ சவுத் வேல்ஸிற்கும், குயின்ஸ்லாந்துக்கும் இடையிலான பெரு நகரங்கள் மற்றும் பிரதான வீதிகளை வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளதுடன், நியூ சவுத் வேல்ஸின் பல பகுதிகள் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 16 மணி நேரம் முன்

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
