இலங்கையில் அழகாக மாற முயற்சிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அழகுசாதனப்பொருட்கள் தொடர்பில் முறையான கட்டுப்பாடுகள் இன்மையால் எதிர்காலத்தில் துரதிஷ்டமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வயது, பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல், சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்ய பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அழகுசாதனப்பொருட்கள் மற்றும் க்ரீம்களில் அதிக செறிவு
எனவே தரமற்ற அழகுசாதனப்பொருட்கள் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் அழகிற்காக பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்களில் அதிக செறிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அண்மையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam