கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் எரிந்த கப்பல் மூழ்கும் அபாயம் - இலங்கைக்கு என்ன பாதிப்பு?
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் கடந்த ஏழு நாட்களாகத் தீப்பற்றி எரிந்த வெளிநாட்டுக் கப்பலான எம்,வி எக்ஸ்பிரஸ் பேர்ள் நேற்றைய தினம் இந்தியாவின் உதவியோடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீப்பிடித்து எரிந்த கப்பலிலிருந்து வெளியான சிதைவுகள் மற்றும் எண்ணெய் காரணமாகக் கடலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் காலநிலை காரணமாக உபகரணங்களைப் பயன்படுத்தி எரிபொருள் கடற்பரப்பில் பரவுவதைத் தடுப்பதும் சிரமம் என கடற்துறை பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே எரிபொருள் கசிவு ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தூய்மைப்படுத்துவதே தற்போதுள்ள ஒரே மாற்றுவழி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது The Report தொகுப்பு,