இலங்கையில் நாளாந்தம் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படும் அபாயம்
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்லும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
அடுத்த மாத இறுதிக்குள் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்படவுள்ள மின் நெருக்கடி தொடர்பில் தான் ஆறு வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் 1 முதல் 3 மணித்தியாலங்கள் வரை ஏற்படுத்தப்படும் மின்தடை, எதிர்வரும் நாட்களில் 12 மணித்தியாலங்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நெருக்கடியான நிலைமையை நிர்வகிக்க அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
