புதிய டெல்டா திரிபு பாடசாலை மாணவர் மத்தியில் பரவக்கூடிய அபாயம்
புதிய டெல்டா திரிபு பாடசாலை மாணவர் மத்தியில் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட டெல்டா புதிய திரிபு இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர் மத்தியில் அதிகளவு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த டெல்டா உப பிரிவு ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பூரணமான தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் நோய்த் மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டாலும் கூடுதல் பாதிப்பிற்கு இலக்காக மாட்டார்கள் என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.