அதிகரிக்கும் போர் பதற்றம்! பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்
பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு வர விரும்பினால் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான மோதலில், பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பியதுடன், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றது.
இதனால், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகள் பெலாரஸூக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில், பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது குறித்த முழுமையான தகவல்களை அறிந்துக்கொள்ள ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தை (00 79801445726) 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.